• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பழைய டயர், தூக்கி வீசிபட்ட பொருட்களில் தண்ணீர் சேராத வண்ணம் பார்க்க வேண்டும் – மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

July 12, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள், தூய்மை பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை பீளமேடு அருகே பயனியர் மில் சாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார அலுவலக வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முன்களப்பணியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரிசோதனை செய்து சேகரிக்கப்பட்ட பரிசோதனையின் விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்திட வேண்டும்.

களப்பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், என தெரிவித்தார். பின்னர் கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க, கொசுக்களை ஒழிக்க பழைய டயர், தூக்கி வீசியெரியப்பட்ட பொருட்கள், பிளாஸ்டிக் கேன்களில் போன்றவற்றில் தண்ணீர் சேராத வண்ணம் பார்க்க வேண்டும். தேவையற்ற அதுபோன்ற பொருட்களை அகற்றிட வேண்டும்.

வீட்டில் உபயோகப்படுத்தாத கழிவறைகளில் கொசு உற்பத்தி செய்ய வாய்ப்புண்டு. அம்மாதிரியான கழிப்பிடங்களை சுத்தம் செய்த பின்னர், மூடி வைக்க வேண்டும் என முன்களப்பணியாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பொன்னி நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, அதன் தரத்தினை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி, செயற்பொறியாளர் பார்வதி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க