• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை மீது போலீசில் புகார்!

November 3, 2018 தண்டோரா குழு

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியை மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 12 வகுப்பு மாணவன் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த முகப்பேரில் இயங்கிவரும் பிரபல தனியார் பள்ளியில், மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் படித்து வருகிறான். அம்மாணவனுக்கு அப்பள்ளியை சேர்ந்த 40 வயதான ஸ்மிதா என்ற கணினி ஆசிரியை பள்ளியிலேயே தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆசிரியை ஸ்மிதாவை, பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

எனினும், அந்த மாணவனுக்கு அந்த ஆசிரியை தொலைபேசி மூலம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், மாணவனின் பெற்றோர் நொளம்பூர் காவல் நிலையத்தில், கணினி ஆசிரியை ஸ்மிதா மீது புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க