• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளி சிறுவர்களை வைத்து தன் காரை சுத்தம் செய்த ஆசிரியை பணியிடை நீக்கம்

December 8, 2018 தண்டோரா குழு

உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி சிறுவர்களை வைத்து தனது காரை சுத்தம் செய்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிப்ரவுலி பகுதியில் வசிப்பவர் கரிமா ஷரீப் அதே பகுதியில் உள்ள கபர்வா தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆசிரியை கரிமா பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து தனது காரை சுத்தம் செய்துள்ளார். மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ இணையதளங்களில் வெளியானது. அந்த வீடியோ வில் காரின் பதிவெண் உள்பட அனைத்தும் தெளிவாக பதிவானது. இதுகுறித்து காரின் பதிவெண் வைத்து அதிகாரிகள் விசாரிக்க தொடங்கினர்.

இதுதொடர்பாக ஆசிரியை கரிமா பக்கத்து வீட்டுக்காரிடம் விசாரித்தபோது இது ஒருமுறையல்ல பெரும்பாலும் பள்ளி சிறுவர்கள் தான் ஆசிரியையின் காரை சுத்தம் செய்வதாக தெரிவித்தார். பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆசிரியையின் மீது தவறு இருப்பது உறுதியானது. மேலும் விசாரணையில் மற்றொரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியையின் வீட்டில் சமைக்கும் புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தவிர்க்கும் வகையில் தாமதமாக வரும் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க