• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளிக்கல்வித் துறையில் 40 அறிவிப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன்

June 7, 2017 தண்டோரா குழு

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்ந்த 40 அறிவிப்புகள் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் திகழ்கின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், சீருடை உள்ளிட்டவை ஒரு வாரத்திற்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.3 லட்சம் மாணவர்களுக்கு பாடநூல் உள்ளிட்ட 14 பொருட்களை பள்ளிக்கல்வித்துறை விநியோகிக்க உள்ளது.

மாணவர்கள், மத்திய அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அந்த மையங்களில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும். தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்ந்த 40 அறிவிப்புகள் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்படும். பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க