• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளிகளில் National Council of Educational Research and Training புத்தகங்களை விற்க அனுமதி – சிபிஎஸ்இ

December 21, 2017 தண்டோரா குழு

புதுதில்லியில் பள்ளி வளாகத்தில் உள்ள கடைகளில், National Council of Educational Research and Training புத்தகங்களை தவிர வேறு புத்தகங்கள் விற்ககூடாது என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், பள்ளி வளாகத்திற்குள் உள்ள கடைகளிலிருந்து தான் பிள்ளைகளுக்கு புத்தகங்கள், பள்ளி சீருடைகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்ளை வாங்க வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்ததது. இதையடுத்து, பள்ளிகள் மாணவர்களுக்கு கல்வி கற்று தருவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியா முழுவதிலும் சுமார் 18,000 சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.அந்த பள்ளிகளின் வளாகத்தில் உள்ள கடைகளில் தனியார் நிறுவனத்தின் புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், National Council of Educational Research and Training புத்தகங்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும் அந்த கடைகளில் விற்கப்படும் ஸ்டேஷனரி பொருட்கள் எம்ஆர்பி விலைக்குக்கு அதிகமாக இருக்ககூடாது என்றும் சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க