• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல மனிதர்களின் வாழ்வை வண்ணமயமாக மாற்றும் இளம் தளிர்

March 8, 2023 பா. ஸ்ருதி

ஹோலி பண்டிகையான இன்று வண்ணங்கள் தூவி கொண்டாடி கொண்டிருக்கும் சமூகத்தின் நடுவில், கோவையை சேர்ந்த ஒரு சமூக நல அறக்கட்டளையான – இளம் தளிர் பல மனிதர்களின் வாழ்வை வண்ணமயமாக மாற்றி வருகின்றது.

நண்பர்கள் சேர்ந்து தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, கடந்த மூன்று வருடங்களாக சமூகத்தில் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறது.மரம் நடுதல், உணவு வழங்குதல், இரத்த தானம், விழிப்புணர்வு முகாம் செய்யல் ஆற்றி வருகிறது.

இளைஞர்கள் மனதில் மனிதம் என்ற அற்புதத்தை விதைக்கும் நோக்கத்தில் அறக்கட்டளையில் தன்னார்வு தொண்டு செய்ய இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு அம்சங்களை வழிவகுத்து இருக்கிறது.

இளம் தளிர் இயக்குனர் ஹரிஹர் கூறுகையில்,

“தமிழகத்தின் அணைத்து மாநிலத்திலும் எங்களது சமூக பணியை செயலாற்றி வருகின்றோம்எங்களது நோக்கம், கோவையை பசி இல்லா கோவையாக மாற்றுவது. மற்றும் இரத்தம் கிடைக்காமல் எந்த உயிர் இழப்பும் நிகழ கூடாது. இப்பொது, சுமார் 250 தன்னார்வ தொண்டர்கள் இருக்கிறார்கள். அனைவரும் இளைஞர்கள். இவர்களையும் இவர்களின் செய்யலையும் பார்த்து ஒவொரு இளைஞகளும் சமூகத்தில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்த முன்வருவார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார்.

மேலும் படிக்க