May 17, 2018 தண்டோரா குழு
இருபது ஆண்டுகளுக்கு பிறகு வடகொரிய சென்ற இந்திய பிரதிநிதியாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் சென்றார்.
செப்டம்பர் 1998இல்,இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் முக்தர் அப்பாஸ் நக்வி.அவர் ஒரு திரைப்பட விழாவிற்காக வடகொரிய தலைநகர் பியாங்யாங் சென்றார்.
அதன் பின் 20 வருடங்களாக இந்தியாவில் இருந்து யாரும் செல்லவில்லை . தற்போது இந்திய வெளியுறவு இணை அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங்-யும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.வி.கே.சிங் வடகொரியாவின் மூத்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்தார். இந்த இரண்டு நாட்களும் வி.கே.சிங் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்திய மற்றும் வடகொரிய இரு நாட்டிற்கும் இடையே உள்ள அரசியல்,கலாசாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை பற்றி விவாதம் பேசினார்கள்.