• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பல ஆண்டுக்கு பிறகு வடகொரியா சென்ற இந்திய அமைச்சர்

May 17, 2018 தண்டோரா குழு

இருபது ஆண்டுகளுக்கு பிறகு வடகொரிய சென்ற இந்திய பிரதிநிதியாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் சென்றார்.

செப்டம்பர் 1998இல்,இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் முக்தர் அப்பாஸ் நக்வி.அவர் ஒரு திரைப்பட விழாவிற்காக வடகொரிய தலைநகர் பியாங்யாங் சென்றார்.

அதன் பின் 20 வருடங்களாக இந்தியாவில் இருந்து யாரும் செல்லவில்லை . தற்போது இந்திய வெளியுறவு இணை அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங்-யும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.வி.கே.சிங் வடகொரியாவின் மூத்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்தார். இந்த இரண்டு நாட்களும் வி.கே.சிங் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்திய மற்றும் வடகொரிய இரு நாட்டிற்கும் இடையே உள்ள அரசியல்,கலாசாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை பற்றி விவாதம் பேசினார்கள்.

மேலும் படிக்க