• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பல்வேறு திட்டங்களை வழங்கிய இந்த அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

March 9, 2019 தண்டோரா குழு

பல்வேறு திட்டங்களை வழங்கிய இந்த அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 224 . 10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள, குளங்களைக் தூர்வாரி புணரமைத்தல், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கோவை சட்டமன்ற மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

50 ஆண்டு காலங்களில் இல்லாத வளர்ச்சியை கோவை நகரில் இந்த அரசு தந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் மெரினா பீச் இருப்பது போல, கோவை மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்தை ஏற்படுத்தும் வகையில் குளக்கரைகள் புனரமைக்கப்பட்டு மக்களின் பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டங்களை வழங்கிய இந்த அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது. கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெறுவது போல தமிழகத்தில் மற்ற பிற மாநகராட்சிகளிலும் இது போன்று பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க