• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

August 24, 2021 தண்டோரா குழு

போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம்( சி.ஐ.டி.யூ) சார்பில் கோவை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலுலம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில்,போக்குவரத்து பணிமனைகளுக்கு தேவையான உதிரிபாகங்களை வழங்கிட வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். விபத்து ஏற்படுத்தியதாக ஓட்டுநர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மண்டல சி.ஐ.டி.யூ. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் வேளாங்கண்ணிராஜ், ஈரோடு மண்டல பொதுசெயலாளர் ஜான்சன் கென்னடி, திருப்பூர் மண்டல தலைவர் கந்தசாமி, நீலகிரி மாவட்ட தலைவர் சுந்தரம், அரசு விரைவு போக்குவரத்து கழக மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க