• Download mobile app
08 May 2025, ThursdayEdition - 3375
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பரம்பிக்குளம் சட்டம் ஒழுங்கு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

April 18, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் அலுவலகத்தில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் தலைமையில் இன்று பரம்பிக்குளம் சட்டம் ஒழுங்கு குறித்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் பரம்பிக்குளம் மாவட்ட வனஅலுவலர் ,பொள்ளாச்சி மாவட்ட வனஅலுவலர்,பரம்பிக்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் , வால்பாறை கண்காணிப்பாளர் , செயற்பொறியாளர், பரம்பிக்குளம் பொதுப்பணித்துறை,பொள்ளாச்சி வட்டாட்சியர்,டாப்சிலிப் வன அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சமாதான கூட்டத்தில், தமிழகப்பொதுப்பணித்துறை அலுவலர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையினை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பின் இரு மாநிலங்களுக்கிடையே அமைதி மற்றும் நல்லுறவு ஏற்பட அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு நல்குவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க