• Download mobile app
14 Jun 2026, SundayEdition - 3777
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பப்ஜி விளையாட்டு விபரிதம்: குடும்பத்தையே கொலை செய்த வாலிபர்

October 12, 2018 தண்டோரா குழு

பப்ஜி விளையாட அனுமதிக்காததால் ஆத்திரத்தில் குடும்பத்தையே கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இணையதள விளையாட்டான “பப்ஜி” விளையாட்டை உலக அளவில் பலரும் விளையாடி வருகின்றனர். பலர் இவ்விளையாட்டிற்கு அடிமையாகியும் உள்ளனர். இதற்கிடையில், டெல்லியில் கல்லூரியில் படித்து வரும் மாணவன் சுராஜ்(19) இவர் “பப்ஜி” விளையாட்டிற்கு மிகவும் அடிமையானவராக இருந்துள்ளார். விளையாடுவதற்காகவே நண்பர்களுடன் சேர்ந்து வாடகைக்கு வீடு ஒன்றையும் எடுத்துள்ளான். கல்லூரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு வாடகை எடுத்த விடில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நண்பர்களுடன் இணைத்து பப்ஜி விளையாடி வந்துள்ளார்.

இதனையறிந்த சுராஜின் சகோதரி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் சுராஜை கண்டித்து கல்லூரிக்கு செல்லும்மாறு வற்புறுத்தியுள்ளனா்.இதனால் கல்லூரி முடிந்து விட்டுக்கு வந்த சுராஜ் வழக்கத்திற்கு மாறாக வீட்டில் உள்ளவா்களின் புகைப்படங்களை எடுத்து கொண்டு இருந்துள்ளர். இதனை பெரிதும் கண்டுகொள்ளாமல் அனைவரும் உறங்க சென்றுள்ளனர். அதிகாலை 3 மணியளவில் தனது பெற்றோரின் அறைக்கு சென்ற சுராஜ் தன்னை பப்ஜி விளையாட விடாதா ஆத்திரத்தில் தாய் தந்தையை சகோதரி என மூன்று பேரையும் கொலை செய்துள்ளான். பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை களைத்து விட்டு கொள்ளை நடந்தது போல் சூழலை அமைத்துவிட்டு தப்பித்துள்ளான்.

இது குறித்து அக்கம் பக்கத்தினா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.மேலும் வீடு எடுத்து தங்கிய நண்பா்கள் 10 பேரிடமும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் படிக்க