• Download mobile app
17 Jan 2026, SaturdayEdition - 3629
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு

April 24, 2017 தண்டோரா குழு

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு திங்கட்கிழமை முதல், ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.மத்திய உளவு பிரிவு போலீசார், பன்னீர் செல்வம் செல்லும் இடங்களில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர். அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் முதல்-அமைச்சர் என்கிற முறையில் அவருக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.துப்பாக்கி ஏந்திய 8துணை ராணுவப் படையினர் பன்னீர் செல்வத்துக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க