• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னீர்செல்வத்துடன் பேச்சு வார்த்தை நடத்த 9 பேர் கொண்டகுழு

April 18, 2017 தண்டோரா குழு

பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணியைச் சேர்ந்த 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா அணி, ஓ.பி.எஸ்அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது.இதனை தொடர்ந்து நடைபெறவிருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் முடக்கப்பட்டது.

இந்நிலையில் கட்சியையும், சின்னத்தை மீட்க இரு அணிகளும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பாக சசிகலா தரப்பினர் அணுகினால் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பன்னீர்செல்வம் நேற்று
தெரிவித்தார்.இதற்கு பன்னீர்செல்வம் தரப்பினர் உள்பட சசிகலா தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓ.பி.எஸ்அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணி சார்பில் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழுவில் வைத்தியலிங்கம், வேணுகோபால், ஜெயக்குமார், செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக்குழுவினர் ஓபிஎஸ் அணியுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மேலும் படிக்க