• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பதவி விலகியது ஏன்? கும்ளே பரபரப்பு விளக்கம்

June 21, 2017 தண்டோரா குழு

தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியது ஏன்? என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ளே பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த வருடம் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளே நியமிக்கப்பட்டார். ஓராண்டிற்கு மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்ட அவரது பதவி காலம் கடந்த மாதமே நிறைவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கும்ளேவே பயிற்சியாளராக தொடர்வார் என அறிவிக்கபட்டது.

இந்நிலையில், பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ளே நேற்று திடீரேனே ராஜினாமா செய்தார்.
மேலும் தான் பதவி விலகியது தொடர்பாக கும்ளே வெளிப்படையான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,எனது செயல்பாட்டில் குறையுள்ளதாக அணி கேப்டன் கருதுவதாகவும் எனது பயிற்சி ஸ்டைல் கோலிக்கு பிடிக்கவில்லை எனவும் பிசிசிஐ தெரிவித்தது. ஆகையால் எங்கள் இருவருக்கும் ஒத்துவராது என்பதால் விலகிச்செல்வதே மேல் என நினைக்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,கேப்டன் விராத் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க