January 19, 2019 தண்டோரா குழு
பட்டியல் வகுப்பில் உள்ள 7 பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்த கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக நான்கு வம்ச பட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
நான்கு வம்ச பட்டக்காரர்கள் மற்றும் ஊர் பண்ணாடிகள் உள்ளிட்ட சிலர் தேவேந்திரகுல வேளாளர் பெயரை அரசாணையாக அறிவிக்ககோரி பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாநில அரசு மத்திய அரசிடம் தங்கள் கோரிக்கைகளை சேர்ந்து, பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்ற நடவடிக்கை எடுக்க கோரி, வரும் 19, 20 ஆகிய நாட்களில் கோவை தேவேந்திர வேளாளர் வீதி அருள் மிகு மாரியம்மன் கோவில் மைதானம் ஊர் பொது இடத்தில் சமைத்து சாப்பிட்டு தங்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
உடனடியாக தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பிரபு பட்டக்காரர், கிருஸ்ணன் பட்டக்காரர், ராதாகிருஸ்ண பட்டக்காரர், மாசிலாமணி பட்டக்காரர் மற்றும் ஊர் பண்ணாடிகள் கலந்து கொள்ள உள்ளனர்.