• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பட்டியலின மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்க கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி மனு

December 15, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டியலின மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு தர வேண்டுமென சமூக சமத்துவ படையின் தலைவரும் முன்னாள் ஐஏஎஸ் மான சிவகாமியும் சமூக நீதிகட்சியின் தலைவருமான பன்னீர்செல்வமும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

இது குறுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகாமி,

கோவையில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தையும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தையும் அவர்களுக்கே வழங்க வேண்டும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள் 6 மணிக்கே வேலைக்கு வரும் நிலையில் அவர்களின் இல்ல சூழ்நிலைகளை புரிந்து கொண்டு 7 மணிக்கு வேலைக்கு வர ஆவணம் செய்ய வேண்டும் ஆகிய இரு கோரிக்கைய மாவட்ட ஆட்சியரிடம் முக்கியமாக வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கிணத்துக்கடவு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் 20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதனை மீட்டு தரவேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளை விசயத்தில் ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் பொது விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் பஞ்சமி நில விவகாரத்தில் அரசுக்கு உரிய கவனம் செலுத்தவில்லை என்று தெரிவித்த அவர் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இதில் கவனம் எடுத்துக் கொள்வதில்லை என கூறினார்.

அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்திற்கு அந்த மக்களிடம் உரிய பணம் தருவதாக சிலர் கூறுவது பஞ்சமி நில விதிகளையே அழிப்பது போல் உள்ளதென விமர்சித்தார். இந்த அரசு பஞ்சமி நிலத்தை மீட்டு தருகிறோம் என்று கூறி உள்ளது எனவும் அதற்கான நடவடிக்கைகளை கூடிய விரைவில் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க