• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்டாசுக் கடைகளை நடத்திட உரிமம் பெற வேண்டும் – மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

August 9, 2017 தண்டோரா குழு

தீபாவளிப் பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகளை நடத்திட உரிமம் பெற வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஊரகப் பகுதிகளில் தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள், வெடிபொருள் சட்ட விதிகள், 2008 -இன் கீழ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக பட்டாசு உரிமம் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பங்களை 31.07.2017 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கத் தக்க வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அதில் விண்ணப்பம் செய்யப்படாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக மனுக்களை பெறவதற்கான வரையறை காலமானது, இறுதியாக 21.08.2017 அன்று மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

“இந்த தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற மனு செய்வதற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும். எக்காரணத்தை முன்னிட்டும் காலவரையறையானது நீட்டிக்கப்படமாட்டாது.

காலக்கெடுவிற்குப் பின்னால் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிர்வாக காரணங்களினால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது,” என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க