• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்ஜெட் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி

January 24, 2017 தண்டோரா குழு

மத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அசாம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை சட்டப் பேரவைத் தேர்தல்கள் ‌நடைபெற உள்ளன.

இந்நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், தேர்தல் நடைபெறுவதால், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை மார்ச் மாதத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி மனு அளித்திருந்தன.

சட்ட பேரவை தேர்தல்கள் முடியும் வரை பட்ஜெட் தாக்கல் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு அனுமதி அளிக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் “சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களுக்கான சிறப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு எதையும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கக்கூடாது. சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மத்திய அரசு செய்த சாதனைகள் குறித்த தகவல்கள் பட்ஜெட் உரையில் இடம்பெறக்கூடாது” என்றும் இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க