• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படை வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக புகார் அளித்த பிஎஸ்எஃப் வீரர் பணிநீக்கம்

April 19, 2017 தண்டோரா குழு

பாதுகாப்புபடை வீரர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்படுவதாகப் சமூக ஊடகங்களில், புகார் அளித்த பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதம் முன்பு பிஎஸ்எஃப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரியும் தேஜ்பகதூர் யாதவ் என்பவர், தன்னைப் போன்ற தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, வீடியோ பதிவு ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் அதிர்ச்சி தெரிவித்ததை தொடர்ந்து, இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதுமட்டுமின்றி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.

இந்நிலையில், தேஜ்பகதூர் யாதவ், ஒழுங்கீன குற்றச்சாட்டுகளுக்காக பணி இருந்து நீக்கம் செய்யப்படுவதாக, பிஎஸ்எஃப் அறிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க