• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பசு பாதுகாவலர்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் – உச்சநீதிமன்றம்

September 6, 2017 தண்டோரா குழு

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்பவர்களைக் கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பசு பாதுகாப்பு பெயரில் நடக்கும் வன்முறை தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணையின் போது பசு பாதுகாப்புப்பின் பெயரால் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக விளக்கமளிக்க ஆறு மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில்,இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க