• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பசுவை கொன்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை – உபி டிஜிபி உத்தரவு

June 6, 2017 தண்டோரா குழு

பசுக்களை கொல்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென உத்தரபிரதேச காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

எனினும், பாஜக ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், லக்னோவில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய உபி டிஜிபி சுல்கான் சிங்,

பசுக்களை கடத்துவோர் மற்றும் அவற்றை கொல்பவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மூன்று அல்லது அதற்கு மேல் ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்திரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பியில் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க