• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது – அர்ஜூன் சம்பத்

July 7, 2018 தண்டோரா குழு

கோவில்களில் விளக்கேற்ற விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து கோவிலில் தடையை மீறி இந்து மக்கள் கட்சியினர் விளக்கேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீவிபத்து குறித்து ஆராய்ந்த விசாரணை கமிஷன்,கோவில்களில் விளக்கேற்றவும்,கற்பூரம் கொழுத்தவும் பல்வேறு வழிகாட்டு நடைமுறைகளை அறிவுறுத்தியது.இதையடுத்து கோவில்களில் விளக்கேற்றவும்,கற்பூரங்கள் கொழுத்தவும் தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடையை கண்டித்து விளக்கேற்றும் போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஈடுபட்டனர்.உக்கடம் லட்சுமி நரசிம்மன் கோவிலில் தடையை மீறி நெய்விளக்குகளை ஏற்றினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்,

“இந்துக்களின் நம்பிக்கையான விளக்கேற்றும் முறைக்கு தடை விதிக்க கூடாது எனவும்,பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.இது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும்,அமைச்சருக்கும் மனு அளிக்க உள்ளதாகவும்,உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”.எனவும் கூறினார்.

மேலும் படிக்க