• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பக்கத்து வீட்டாருடன் சண்டை – செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

June 8, 2020 தண்டோரா குழு

சிசிடிவி வைத்து தனது வீட்டை நோட்டமிடுவதாக கூறி,செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்ய முயன்றவரை தீயணைப்பு வீரர்கள்.
காப்பாற்றினர்.

கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய சரகத்திற்க்குட்பட்ட அறிவொளி நகரில் வசித்து வரும் 35 வயதான மணிகண்டன் என்பவர், கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சுமதி மற்றும் பிரகாஷ் என்ற தம்பதியினருக்கும், இடையே இடப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 2016ம் ஆண்டு, சுமதி என்பவர், மனி கண்டன் மீது புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்துகொண்டு வருகிறதாகவும் தெரிகிறது. இதற்கிடையில்,கடந்த 3 நாட்களுக்கு முன்புசுமதி தனது வீட்டில் சிசிடிவி கேமரா மாற்றி உள்ளார், கேமரா மாற்றியதால் மணிகண்டன் குடும்பத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், மணிகண்டன் தனது வீட்டு பாத்ரூம் சென்றால் சிசிடிவியில் தெரிவதாகவும் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,மணிகண்டன் அம்பேத்கர் சதுக்கத்தில் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறி, நின்று கொண்டு, சுமதி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வந்து மணிகண்டனை கீழே இறங்கி வரும்படி கேட்டுக் கொண்டு வர வைத்து, அவரை கைது செய்து இது குறித்து விசாரணை நடத்த காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

பக்கத்து வீட்டுகாரர்களின் சண்டை காரணமாக செல்போன் டவர் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க