• Download mobile app
28 Jun 2026, SundayEdition - 3791
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பகவத்கீதை ஸ்லோகம் ஒப்பிக்கும் போட்டியில் இஸ்லாமிய சிறுமி முதலிடம்

March 17, 2017 தண்டோரா குழு

ஓடிசாவில் நடைபெற்ற பகவத்கீதை ஸ்லோகம் ஒப்பிக்கும் போட்டியில், 5 வயது இஸ்லாமிய சிறுமி முதலிடம் பிடித்தாள். அந்த பெண்ணின் சாதனை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பகவத்கீதை ஸ்லோகம் ஒப்பிக்கும் போட்டியை பிரக்ஞா மிஷன் என்ற அமைப்பு கடந்த புதன்கிழமை (மார்ச் 15) நடத்தியது. அந்தப் போட்டியில் ஃபிர்தோஷ் என்னும் 5 வயது இஸ்லாமிய சிறுமி கலந்துகொண்டாள். அவள் கேந்திரபாராவில் உள்ள சொவனியா சிஷ்யாஸ்ரம் என்ற பள்ளியில் முதல் வகுப்பு மாணவி.

அவளும் அவளுடைய 1௦ வயது சகோதரன் எஸ்.கே. சலிமுதினும் அந்த ரெசிடென்ஷியல் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களுடைய தந்தை துபாய் நாட்டில் பிளம்பராகப் பணியாற்றி வருகிறார். தமரபூர் கிராமத்தில் உள்ள பட்டமுண்டாய் தொகுதியில் அவர்களுடைய தாய் ஆரிஃபா பீபி வசித்து வருகிறார்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உர்மில்லா கர் கூறுகையில், “பகவத் கீதையிலிருக்கும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களைத் தினமும் பள்ளி மாணவ மாணவியர்கள் சொல்லவேண்டும். எதையும் விரைவில் கற்றுக்கொள்ளும் திறனுடைய ஃபிர்தோஷ், பல ஸ்லோகங்களை எளிதில் மனப்பாடம் செய்து இந்த போட்டியில் அழகாக ஒப்பித்தாள்” என்றார்.

“என் பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்து ஸ்லோகங்களைக் கற்றுக்கொண்டேன். இந்தப் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளேன்” என்று சிறுமி ஃபிர்தோஷ் தன் கையில் பகவத் கீதையை வைத்துக்கொண்டு கூறினாள்.

“என்னுடைய மகளின் சாதனையைக் கண்டு பெருமையடைகிறேன். மத நல்லிணக்கம் பற்றி நம்பிக்கையுண்டு. இதை என் மகள் நிருபித்ததுள்ளாள். மதத்திற்கு இடையே சுவர் எழுப்பாமல், ஒருவரோடு ஒருவர் மகிழ்ச்சியாக வாழவேண்டும்” என்று ஆரிஃபா பீபி கூறினார்.

“மாநிலத்தின் பல பள்ளிகளிலிருந்து இந்த மாணவர்கள் இந்த போட்டில் கலந்து
கொண்டனர். சுலோங்களை ஒப்பிக்க 1௦௦ மதிப்பெண் குறிக்கப்பட்டிருந்தது. அதில் ஃபிர்தோஷ் 98 மதிப்பெண் பெற்றாள்” என்று சம்ஸ்கிருத ஆசிரியர் மற்றும் அப்போட்டியின் நீதிபதி அக்ஷயா பத்ரி கூறினார்.

மேலும் படிக்க