August 13, 2019 தண்டோரா குழு
கோவை தொண்டாமுத்தூர் – மாதம்பட்டி செல்லும் வழியில் உள்ள நொய்யல் பாலம் உள்ளது.
கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் நெய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றில் கரை ஒரங்களில் தங்கி வசித்து பயிர்களை உண்டும்,சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றிகள் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் பெரும் கசதியும் பெரிய அளவிலான மரங்கள் அதிக அளவில் அடித்து வந்து மாதம்பட்டி நெய்யல் பாலம் அடியில் சிக்கியது. இதனால் அடைப்பு ஏற்பட்டு தீயணைப்பு துறையினர் உதவியுடன் மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் கடந்த மழை வாரத்தல் நடைப்பெற்றது.
தற்போது வெள்ள நீர் வடிந்த நிலையில் ஆற்றின் பாலத்தின் அடிப்பகுதியில் பார்வையிட சென்ற போது கொத்து கொத்தாக காட்டுப்பன்றிகள் செத்து உடல் உப்பிய நிலையில் உள்ளன.துர்நாற்றம் விசி வருகிறது. அதை நாய்கள் நின்று வருகிறது.இதனை பார்க்க அப்பகுதியில் வசிக கும் ஏராளமான பொது மக்கள் பார்த்து செல்கின்றனர்.