• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நொய்யல் ஆற்றில் நுரையுடன் ஓடிய தண்ணீர் ; மக்கள் அதிர்ச்சி

September 20, 2017 தண்டோரா குழு

திருப்பூர் நொய்யல் ஆற்றில் கரை புரண்டோடிய வெள்ளத்தில் சாய கழிவு நீர் கலந்து நுரையுடன் ஓடியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்து விளங்கி வரும் நிலையில் ஆண்டொன்றிற்கு சுமார் 24 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவனியை ஈட்டி தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நொய்யல் ஆற்றில் சாய கழிவு நீர் கலப்பதால் விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் தொடந்த வழக்கில் அதிரடியாக சுத்தகரிக்கப்படாத கழிவு நீரை ஆற்றில் கலந்துவிடும் சாய ஆலைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே நவீன பொது சுத்தகரிப்பு நிலையங்களில் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை பின்பற்றவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை காரணமாக 18 பொது சுத்தகதிப்பு நிலையங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூபாய் 200 கோடி வரை வழங்கி மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே கடந்த சில நாட்களாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் ஆற்று நீருடன் சாய கழிவு நீர் கலப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலிபாளையம் பகுதியில் சாய கழிவ நீர் ஆற்றில் கலந்ததால் 23 சாய ஆலைகளுக்கு சீல் வைத்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் நடராஜா தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் சாய கழிவு நீர் கலந்து நுரையுடன் ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் அலட்சிய போக்கினை கைவிட்டு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினார்.

மேலும் படிக்க