March 7, 2019 தண்டோரா குழு
கோவையை அடுத்த பேரூர் பகுதியில் நொய்யல் ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க பூமி பூஜை இன்று போடப்பட்டது.
கோவையை அடுத்த பேரூர் பகுதியில் உள்ள வேடப்பட்டியில் நொய்யல் ஆற்றின் இடையே உள்ள பாலம் சேதமடைந்து உள்ளது. இதனை புதிப்பிக்க உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்க உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அமைச்சர் எஸ் பி வேலுமணி இதில் கலந்து கொண்டார்.
கோவை மாவட்டம் பேரூர் பேரூராட்சி நபார்டு நிதியின் கீழ், 2 கோடி ரூபாய் மதிப்பில், இந்த உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ் பி வேலுமணி மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.