• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேருவின் உறவினர் ஷோபா நேரு காலமானார்

April 26, 2017 தண்டோரா குழு

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உறவினர் பி.கே.நேருவின் மனைவி ஷோபா நேரு(108) செவ்வாய்க்கிழமை காலமானார்.

1908ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் என்னும் நகரில் பிறந்த அவருடைய உண்மையான பெயர் போரி ஆகும்.193௦ம் ஆண்டு லண்டன் நகரில் படித்துக்கொண்டிருந்த போது பி.கே.நேருவின் தொடர்பு கிடைத்தது.இருவரும் இடையே காதல் மலர்ந்தது. 1935ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

நேருவின் குடும்பத்தில் முதல் வெளிநாட்டவர் போரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வந்த பிறகு தனது பெயரை ஷோபா நேரு என்று மாற்றிக்கொண்டார். மேலும் அவர் இரண்டு உலகப்போர், இந்திய விடுதலை போராட்டம் மற்றும் ஹிட்லரால் யூத மக்களுக்கு நடந்த பேரழிவு ஆகியவற்றை அவர் பார்த்துள்ளார்.இவர் ஐ.நா.சபைக்கான இந்திய தூதராகவும் பணிபுரிந்து உள்ளார். மறைந்த ஷோபா நேருக்கு அசோக், ஆதித்யா மற்றும் அனில் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

மேலும் படிக்க