• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்லையில் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் காவல் ஆய்வாளர்

December 4, 2018 தண்டோரா குழு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தந்தையை இழந்து வறுமையில் வாடும் 3 குழந்தைகளை தத்தெடுத்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிகிறது.

சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சியை சேர்ந்த கோட்டூர்சாமி என்பவர் இருதினங்களுக்கு முன் சாலைவிபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தை வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரிப்பதற்காக கோட்டூர்சாமியின் வீட்டிற்கு புளியங்குடி காவல் ஆய்வாளர் ஆடிவேல் சென்றார்.அப்போது தான் அந்தக் குடும்பம் வறுமையில் இருப்பது அவருக்கு தெரியவந்தது.

கை, கால் எலும்பு முறிவால் முடங்கிய தாயையும், மாற்றுத்திறனாளி சிறுவன் உள்ளிட்ட மூன்று குழந்தைகளையும் தந்தை இழந்து வறுமையில் வாடுவதை கண்ட காவல் ஆய்வாளர் ஆடிவேல் மூன்று குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்தார். இதையடுத்து 3 குழந்தைகளையும் தத்தெடுத்து அவர்களது வாழ்நாள் முழுவதுக்குமான செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

காவல் ஆய்வாளரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் படிக்க