• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

October 2, 2017 தண்டோரா குழு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வந்த நெடுவாசல் மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி அறிவித்தது.இத்திட்டத்தால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நெடுவாசல் விவசாயிகள் போராட தொடங்கினர்.மேலும், “ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம்” என்ற பெயரில் இயக்கத்தை கட்டமைத்து தொடர்ந்து அறவழியில் போராடி வந்தனர்.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் 12-ம் தேதி முதல் தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.இந்த போராட்டம் 174 நாட்களை கடந்த போதிலும்,தொடர்ந்து வந்தது.இந்நிலையில் தொடர் போராட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் அறிவித்தார்.ஒன்ஜிசி மீண்டும் தன் பணிகளை தொடங்குமானால் மீண்டும் போராட்டம் தொடங்கும் என போராட்டக் குழு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க