• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நுண் உயிர் உரங்கள் 50 சதவிதம் மானியத்தில் வழங்கப்படும் இணை இயக்குனர் தகவல்

September 21, 2021 தண்டோரா குழு

தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட இணை இயக்குனர் சித்ரா தேவி தெரிவித்துள்ளதாவது:

ஒருங்கிணைந்த முறையில் பயிர் உற்பத்திக்கு நுண் உயிர் உரங்கள் பயன்படுகிறது. மண்ணின் வளத்தையும், சுற்றுச்சூழலையும் இந்த உரங்கள் பாதுகாக்கிறது. நுண் உயிர்கள் பயன்படுத்துவதால் 30 சதவீதம் தழைச்சத்தும், 20 சதவீதம் மணிச்சத்தும் கிடைக்கும்.

மேலும் பயிர்களின் மகசூல் 20 சதவீதம் அதிகரிக்கும். ‘அசோஸ்பைரில்லம்’ என்னும் மண்ணில் வாழும் இந்நுண்ணுயிரி நெல், சோளம், கம்பு, வாழை, காய்கறி பயிர்களின் மகசூலை 25 சதவீதம் அதிகரிக்கிறது. அதே போல் ‘பாஸ்போபாக்டீரியா’ நுண்ணுயிரி தாவரங்களின் திசுக்கள் மற்றும் வேர்கள் செழித்து வளர உதவுகிறது.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நுண் உயிர் உரங்கள் 50 சதவிதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகலாம் .

இவ்வாறு சித்ரா தேவி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க