• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீலகிரி அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பிடிபட்டது

February 5, 2019 தண்டோரா குழு

கூடலூர் அருகே பாட்டவயல் பகுதியில் ராயின் என்பவரது வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பிடிபட்டது. ராயின் என்பவரது வீட்டில் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாட்டவயலில், ராயின் என்பவரது வீட்டிற்குள் இன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. வீட்டிற்குள் சிறுத்தை இருப்பதை பார்த்த வீட்டிலிருந்தோர், உடனடியாக வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறி, கதவுகளை பூட்டிவிட்டனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையின் நடவடிக்கையை கணித்து, மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது, கூண்டு வைத்து பிடிப்பது உள்ளிட்ட வழிமுறைகளை பற்றி திட்டமிட்டு, இறுதியில், கூண்டு வைத்து பிடித்தனர்.

சுமார் 6 மணி நேர முயற்சிக்குப்பிறகு, சிறுத்தை பிடிபட்டது. பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதியில் கொண்டு விடப்படும் எனக்கூறப்படுகிறது. வீட்டிற்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க