• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிபதி கர்ணன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

June 21, 2017 தண்டோரா குழு

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கர்ணனுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதனால் கடந்த ஒரு மாதமாக நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்து வந்தார். இதற்கிடையில் கோவையில் நேற்று கர்ணனை கைது செய்த கொல்கத்தா போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து சென்று அதன் பின் கொல்கத்தாவிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பிரெசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க