• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

January 9, 2019 தண்டோரா குழு

சிலை கடத்தல் வழக்குகளை தமிழக அரசு கையாளும் நிலையை பார்த்தால், நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலைகடத்தல் வழக்கில் தமிழக அரசு தரப்பு நடவடிக்கை குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகியும் இன்னும் அவருக்கு அலுவலகம் ஒதுக்கவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலை நியமித்து 50 நாட்களாகியும் இன்னமும் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக தொடரும் நிலையில், சிறப்பு அதிகாரி ஏன் தொடரக்கூடாது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி,சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து உத்தரவிடப்பட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணை நடந்தபோது, நீதிமன்றம் உத்தரவிட்டும் கிண்டியில் தன்னுடைய அலுவலகத்தைப் பயன்படுத்த முடியாமல் தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன்.மாணிக்கவேல் தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் வேண்டாம் எனக்கூறியதாக தெரிவித்தார். அப்போது, டிஜிபியின் உதவியாளர் ஒருவர் கேட்டதால் தான் சாவியை ஒப்படைத்ததாக விளக்கம் அளித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து 50 நாட்களாகியும் இன்னும் ஒரு அலுவலகம் கூட வழங்காததைக் கண்டித்தனர். சிலை கடத்தல் தடுப்பு வழக்கை தமிழக அரசு கையாளுவதை பார்க்கும் போது, நீதித்துறை கடும் நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க