• Download mobile app
18 Jan 2026, SundayEdition - 3630
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“நீட்” தேர்வை மூன்று முறை எழுதலாம்

January 25, 2017 தண்டோரா குழு

மருத்துவப் படிப்புகளில் சேருவத்ரகான நாடுமுழுவதும் நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வை (நீட்) மாணவர் எழுதுவதற்கு மூன்று முறை வாய்ப்புத் தரப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக நிர்ணியக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் வரும் மாணவர்கள் 30 வயது வரையிலும் “நீட்” தேர்வை எழுதலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இதில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் மூன்று முறை வரை நீட் தேர்வு எழுதலாம்.

மேலும் படிக்க