• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

September 4, 2017

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில அரசை கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாம் தமிழர் கட்சியினர் கோவை ரயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அக்கட்சியை சேர்ந்த சசிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்

மத்திய அரசு சட்டத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற மெத்தனப்போக்கில் உள்ளது.
கழிப்பிட வசதி கூட கிராமங்களிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நீட் தேர்வுக்கு தயாரவது சாதியமில்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு கனவாக மாற்றிவிட்டது. அதற்கு உதாரணமே அனிதாவின் தற்கொலை. இந்த தேர்வை ரத்து செய்ய வில்லை என்றால் , தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க