• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘நீட்’ தேர்வு ரத்து குறித்து பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும்-பள்ளிக்கல்வி அமைச்சர்

March 2, 2017 தண்டோரா குழு

‘நீட்’ தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிதான் முடிவு செய்ய வேண்டும். ‘நீட்’ தேர்வு பிரச்சினை என்பது இந்தியா அளவிலான பிரச்சினை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது;

“தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 12௦௦ ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரமாக்குவது தொடர்பாக அரசின் நிதிநிலைக்கு ஏற்ப தமிழக முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.

‘நீட்’ தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஏற்கனவே சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமரிடம் தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். ‘நீட்’ தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் மோடிதான் முடிவு செய்ய வேண்டும். ‘நீட்’ தேர்வு என்பது இந்தியா அளவிலான பிரச்சினை. ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் மத்திய அரசை எதிர்த்துதான். தமிழக அரசை எதிர்த்து இல்லை”
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

மேலும் படிக்க