• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

September 11, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வுக்கு எதிராக டிடிவி தினகரன் தலைமையில் நடக்கவிருந்த பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், வருகிற செப்டம்பர் 16-ம் தேதி டிடிவி தினகரன் தலைமையில்,பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த
பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில் அன்றைய தேதியில் உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்த ஏற்கெனவே வேறு ஒருவர் அனுமதி பெறுவிட்டதால், டிடிவி தினகரன் தரப்புக்கு அனுமதி அளிக்கமுடியாது என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் டிடிவி தினகரன் தலைமையில் மதுரை மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க