• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நாளை நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து – தினகரன் அறிவிப்பு

September 8, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நாளை நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக நாளை சென்னையில் டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் எந்த ஒரு போராட்டமும் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதையடுத்து, நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நாளை நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நீட் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து கழகத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க