விண்வெளி ஆராய்ச்சியில் யாரும் எட்டாத மைல்கல்லை சீனா அடைந்துள்ளது. சீன நேரப்படி இன்று காலை 10.26 மணி அளவில் இதுவரை யாரும் சென்றடையாத நிலவின் மறுபக்கத்தை சீன விண்கலம் சாங்’இ-4 அடைந்தது.
நிலவை ஆய்வு செய்வதற்காக லாங் மார்ச்-3பி என்ற ராக்கெட் மூலம் சாங்’இ-4 என்ற சீனா செயற்கைக்கோள் இன்று நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதில் நிலவின் மேற்பரப்பு மற்றும் உட்பகுதியை ஆய்வு செய்வதற்காக, லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த விண்கலம் வானியல் கூறுகளை ஆராய்தல், நிலவின் நிலப்பரப்பு, தாதுக்கள், கதிர்வீச்சின் அளவு, அணுக்கள் மற்றும் சூழல் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக சீனாவினால் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, இந்த விண்கலம் டிசம்பர் 2ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. பின்னர் தனக்குரிய சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. நிலவும் பூமியும் ஒரே சுற்று வட்டப்பாதையில் பயணிப்பதால் நிலவின் மறுபக்கம் இதுவரையில் காணப்படாத இருண்ட பகுதியாக இருந்தது. இதனால், நிலவின் இருண்ட பகுதியில் முதல்முறையாக தரையிறங்க திட்டமிட்டிருந்தது. இதுவரையில் நிலவின் மறுபக்கத்தை பார்க்க முடிந்ததே தவிர யாரும் அங்கு சென்று அடைந்ததில்லை. இந்நிலையில், சீனா ஏவிய சாங்’இ-4 செயற்கைக்கோள் இன்று நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா வரலாறு படைத்துள்ளது.
இதுவரை எந்தவொரு விண்கலமும் அங்கு தரையிறங்கியது இல்லை. நிலவின் மறுபுறத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் இதுவே ஆகும். மேலும், உயிரியல் தொடர்பான ஆய்வு மேற்கொள்வதற்காக, உருளைக்கிழங்கு, பட்டுப்பூச்சிகள், விதைகள் ஆகியனவும் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை
தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் ! தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!!