• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிலப் பிரச்சனையால் குழந்தையின் நாக்கை அறுத்த பெண்

December 10, 2018 தண்டோரா குழு

வேலூரில் நாட்றாம்பள்ளி அருகே நிலப்பிரச்னை காரணமாக குழந்தையின் நாக்கை அறுத்த பெண் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவருக்கு நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில்,லட்சுமி விஜயராகவனின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகன் திக்சாந்த் வீட்டருகே விளையாண்டு கொண்டிருந்த பொழுது சிறுவனை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று நாக்கை அறுத்துள்ளார்.

பின்னர், பலத்த காயத்துடன் ரத்தம் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திக்சாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விஜயராகவன் போலீசில் புகார் அளித்தும் லட்சுமி மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். காவல்துறையின் இச்செயல் மிகுந்த மனக்கவலையை ஏற்படுத்துவதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க