• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிறைமாதத்தில் பணிபுரிந்த கர்ப்பிணிக்கு 100 டாலர் டிப்ஸ் கொடுத்த போலீஸ் அதிகாரி !

February 20, 2019 தண்டோரா குழு

அமெரிக்காவின் தெற்கு ஜெர்சியில் அமைந்துள்ள உணவகத்தில், சர்வராக பணி புரிகிறார் கோர்ட்னே. தனது முதல் குழந்தையை சுமக்கும் இவருக்கு, தற்போது, 7வது மாதம் நடந்து கொண்டிருக்கிறது. தினமும் சளைக்காமல் பணிக்கு சென்று, அனைவருக்கும் புன்னகையுடன் பரிமாறும் கோர்ட்னே, ஒருநாள் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு உணவு பரிமாறியுள்ளார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணி கோர்ட்னேவின் மீது போலீஸ் அதிகாரிக்கு பரிவு உண்டாகியுள்ளது. இதையடுத்து, அவரை பற்றி உணவகத்தில் விசாரித்துள்ளார். கோர்ட்னே குறித்து உணவகத்தில் கூறும் போது, இது அவருடைய முதலாவது குழந்தை. ஆனால், கோர்ட்னே தொடர்ந்து வேலை செய்து வருகிறார் என்றனர். இதைப் பற்றி கேட்ட அதிகாரி வியப்பில் உறைந்திருக்கிறார். குழந்தை பேறு அடையும் போது ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கு என சலுகைகளை எதிர்பார்க்கும் நிலையில், கோர்ட்னே வித்தியாசமாக தெரியவே, அதிகாரி அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

அதன் பின்னர், 8.75 டாலர்கள் என கட்டணம் குறிக்கப்பட்ட, அவருக்கான பில் வந்துள்ளது. அதில், கூடுதலாக 100 டாலர்கள் டிப்ஸாக கொடுத்துள்ளார். இதற்கிடையில், இதை எதையும் அறியாத கோர்ட்னே, வழக்கம் போல் வேறு ஒரு டேபிளில் தனது பணியை தொடர்ந்து கொண்டிருந்தார். அதற்குள் போலீஸ் அதிகாரியும் சென்று விட்டார். இதையடுத்து, உணவக உரிமையாளரிடம் அந்த தொகை சென்று சேர்கிறது. அதன் பின்னர், அவர் கோர்ட்னேவை அழைத்து, அவருக்கு 100 டாலர் டிப்ஸ் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். இதனை அறிந்ததும் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

மேலும், அதிகாரி வழங்கிய குறிப்பில், “முதல் குழந்தையை கொண்டாடுங்கள். இது தான் நீங்கள் எப்போதும் மறக்க முடியாத தருணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கோர்ட்னேவின் தந்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க