• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியூயார்கைவிட 33 மடங்கு பெரிய நகரத்தை உருவாக்குகிறது சவூதி அரேபியா !

February 24, 2018 தண்டோரா குழு

சவூதி அரேபியா அரசு 5௦௦ பில்லியன் டாலர் செலவில் நியூயார்க் நகரை விட  33 மடங்கு பெரிய நகரத்தை உருவாக்கவுள்ளது.

ஜோர்டான் மற்றும் எகிப்த் நாட்டை இணைப்பது போல் சவூதி அரேபியா  ஒரு பெரிய நகரத்தை உருவாக்க உள்ளதாக சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் அறிவித்துள்ளார். இந்நகரம் 5௦௦ பில்லியன் டாலர் செலவில் கட்டமைக்க உள்ள இந்த நகரம் முழுவதும் புதுப்பிக்கூடிய ஆற்றலைக் கொண்டு இயங்க உள்ளது. இந்நகரம் 1௦,23௦ சதுர மைல் பரப்பளவில், அதாவது நியூயார்க் நகரை விட 33 மடங்கு பெரிய நகரமாக உருவாக உள்ளது.

இதுமட்டுமின்றி இந்நகரம் முழுக்க முழுக்க தொழில் துறைவளர்ச்சிக்காகவும், வணிகத்திற்காக மட்டுமே கட்டமைக்கப் படுகிறது. இந்த நகரம் அமைக்கும் திட்டத்தின் பெயர் NEOM என்றும் இந்த திட்டத்தை செயல்படுதுவதற்க்கான நிதியை சவூதிஅரேபியா அரசும், தனியார் முதலீட்டாளர்களும் சேர்ந்து அளிக்கவுள்ளனர். இந்த திட்டத்தின் படி சவூதி எண்ணை மீதான சார்பு நிலையைக்குறைத்து, உணவு, ஆற்றல், உயிரியல் தொழில்நுட்பம், மேம்பாட்டு உற்பத்தி மற்றும் பொழுதுபோக்கு சார்ந்து தனது ஈடுபாட்டை காட்டவே இந்த நகரம் கட்டமைக்கபட  உள்ளது.

இந்த திட்டத்தைப்பற்றி பத்திரிக்கையாளர் கூறுகையில்,

அமெரிக்காவில் உள்ள பௌர்லிங்டன், வேர்மொன்ட் போன்ற பெரிய நகரங்கள் புதுபிக்ககூடிய ஆற்றல்லை கொண்டு இயங்கி வருகிறது.    அதே போல் நோர்வே மற்றும் அயர்லாந்து நாட்டில் கூட இயற்கை வளங்களைக்கொண்டு இயங்கும் நகரங்கள் உள்ளது.  தற்போது, NEOM திட்டத்தின் படி நகரம் அமைக்கப்பட்டாலும் அதுவும் இயற்கை வளங்களைக்கொண்டு இயங்கும் ஒரு மாபெரும் நகரமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த நகரம் 2௦25ஆம் ஆண்டு தயாராகிவிடும் என்று  தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க