• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடியிருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும்” : அமைச்சர் ஜெயக்குமார்

July 11, 2019

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடியிருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும்” :என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர், அழகு முத்துக்கோனின் 262வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

இந்தியாவிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் என்று தெரிவித்தார். நீட் மசோதா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வுக்கு காரணமே திமுக, காங்கிரஸ் கூட்டணி தான் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், அதிமுகவுக்கு ஏற்பட்டதைப் போல், இந்திய அணிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்.உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தான் விளையாடியிருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும் என்றும் கிண்டலடித்தார்.

மேலும் படிக்க