• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நித்யானந்தா மீது கர்நாடக டிஜிபி மற்றும் தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் பியூஸ் மனுஷ் புகார்

January 22, 2018 தண்டோரா குழு

பெங்களூரு நித்தியானந்தா ஆசிரம குழந்தைகளுக்கு கொச்சை வார்த்தைகளை கற்றுத்தருவதாக நித்யானந்தா மீது சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் புகார் அளித்துள்ளார்.

ஆண்டாள் குறித்து சமீபத்தில் கவிஞர் வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பலரும் அவரையும் அவரது குடும்பத்தையும் ஒருமையில் பேசி வந்தனர். அந்த வகையில் சமூக வலைதளங்களில் நித்தியானந்தா ஆசிரமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வைரமுத்து குறித்து கொச்சையான விமர்சனங்கள் வைக்க அவருடன் இருந்த காவியுடை அணிந்த சில சிறுமிகள் ஆபாச வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சனம் செய்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து பலரும் நித்யானந்தா ஆசிரமத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்,சேலத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் பியூஷ் மனுஷ் என்பவர் சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது மிக ஆபாசமாக விமர்சனங்களை முன்வைத்து வரும் நித்யானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக மாநில டிஜிபி மற்றும் தேசிய குழந்தைகள் நல ஆணையத்திற்கு இமெயில் மூலம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து,இப்புகாரின் அடிப்படையில் கர்நாடக போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க