• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘நிதி ஆப்கே நிகட்’ வரும் 12ம் தேதி நடக்கிறது

April 9, 2021 தண்டோரா குழு

கோவையில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில், வரும் 12ம் தேதி ‘நிதி ஆப்கே நிகட்’ என்கிற பெயரில் ஏப்ரல் மாத குறைதீர் கூட்டம் நடக்கிறது.

கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள, மண்டல ஈ.பி.எப்., அலுவலகம், இணையவழியில் இம்முகாமை நடத்த உள்ளது. இக்கூட்டம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமையில் நடக்கிறது. பி.எப்., சந்தாதாரர்களுக்கு, காலை, 11:00 முதல், 12:00 மணி வரையிலும், தொழில்நிறுவன உரிமையாளர்களுக்கு, மதியம், 12:00 முதல், 1:00 மணி வரையிலும், ஓய்வூதியதாரர்களுக்கு மதியம் 2.30 முதல் 3.30 வரையிலும் இணைய வழியில் நடக்கும்.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 9ம் தேதிக்குள் இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த தகவலை, கோவை மண்டல பி.எப்., கமிஷனர் ஜெய்வாடன் இங்லே வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க