• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்’ – ஜி.ராமகிருஷ்ணன்

May 11, 2017 தண்டோரா குழு

போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;

” தமிழக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வரும் 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளார்கள்.

56 சதவிகிதம் மாநில அரசாங்கம் அறிவித்துள்ள கட்டணச் சலுகைக்காக கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையிலும் அந்த நிதி முறையாகவும், முழுமையாகவும் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதிநெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் தொழிலாளிகள் வாங்கிய கடனுக்காக திருப்பிச் செலுத்திய பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளிக்காமல் போக்குவரத்துக் கழகங்கள் தங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க பயன்படுத்தியுள்ளன.

மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.7000 கோடி இன்னும் வழங்காததால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய பணப் பயன்களை வழங்கவில்லை. போக்குவரத்துக் கழகங்கள் அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலையில் உள்ளன.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டுமென்று போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். இதை பற்றி கவலைப்படாத நிலையில் தமிழக அரசு உள்ளது.

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானதாகும். எனவே தமிழக அரசு உடனடியாக போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு போக்குவரத்துக் கழகங்களுக்கு தான் செலுத்த வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வையும் உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.”

இவ்வாறு அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க