December 15, 2017
தண்டோரா குழு
சீனாவில் Cerebral Palsy நோயால் பாதிக்கப்பட்ட பெண், நாவல் ஒன்று எழுதி வெளியிட்ட சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சீனா நாட்டின் தென்கிழக்குசினாஸ் சிசுவான் மாகாணத்தின், செங்க்டுவை சேர்ந்தவர் சென் யூவான்(34). அவர் Cerebral Palsy என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் தனது இடது கையின் ஆள்காட்டி விரலை பயன்படுத்தி, கணினி விசைபலகையின் உதவியுடன் 130,000 வார்த்தைகளை கொண்ட ‘Grandma on the Clouds’என்னும் நாவலை எழுதியுள்ளார். இதை எழுத அவருக்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டது.
சென்னுக்கு 1 வயது இருக்கும்போது, அவருக்கு இந்த நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, அவரை வளர்க்க, அவருடைய தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், சென்னின் பாட்டி, அவரை வளர்க்க முன்வந்தார். அடிப்படை கணிதம், பாடங்களை எப்படி படிக்க வேண்டும் மற்றும் சென்னின் கல்விக்கு தேவையான உதவிகளை சென்னின் பாட்டி செய்துள்ளார்.
இருப்பினும், வகுப்பிலிருந்த மற்ற மாணவ மாணவிகளுடன் இணைந்து படிக்க முடியாத காரணத்தால், பள்ளிக்கு செல்வதை சென் கைவிட்டுவிட்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு, அவருடைய பாட்டி புற்றுநோய் காரணமாக காலமானார்.
தற்போது, சென் சீனாவின் சிசுவான் மாகாணத்தில் உள்ள ‘Writers Association’னின் உறுப்பினராக இருக்கின்றார். கடந்த 2௦14ம் ஆண்டு, அவர் எழுதிய நாவல் வெளியாகியது. எனினும் இது குறித்து யாருக்கும் தெரியவில்லை தற்போது சென் பற்றி ஒரு படம் வெளியானது. அப்படத்தின் மூலம் தான் அவர் நாவல் எழுதியது தெரியவந்தது.
அந்த நாவல் மைக்ரோபிலிம் ஆகவும் வெளியாகி, பல விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.