• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்றே இறைச்சி கடைகளில் குவிந்த அசைவ பிரியர்கள்

April 24, 2021 தண்டோரா முழு

நாளை முழு ஊரடங்கு என்பதால் கோவையில் இன்றே இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் வீடுகளில் அசைவ பிரியர்கள், ஆட்டு இறைச்சி அல்லது கோழிக்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாளை முழு ஊரடங்கு என்பதால் கோவை மாநகர பகுதியில் அசைவ பிரியர்கள் மீன் கடை, கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் கறிகள் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஊரடங்கிற்கு மத்தியில் இறைச்சி கடைகளில், அசைவ பிரியர்கள் காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க