• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் வைத்திருந்தால் கடும் அபராதம் – மாநகரட்சி ஆணையாளர் விஜய் கார்த்திகேயன்

December 31, 2018 தண்டோரா குழு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நாளை முதல் கடைகளில் விற்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ கடும் அபராதம் விதிக்கப்படும் என கோவை மாநகரட்சி ஆணையாளர் விஜய் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவது திடக்கழிவு மேலாண்மைக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்துக்கும் அவை பெரும் கேடு விளைவித்து வருகின்றன இதை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து முதல்வர் பழனிசாமி கடந்த ஜூன் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். தமிழகம் முழுவதும் இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இதையடுத்து நாளை முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை இன்று பறிமுதல் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய கார்த்திகேயன்,

வீடு, கடைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி சார்பில் பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளில் விற்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ கடும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க